புதன், 3 செப்டம்பர், 2014

நாகர் வழிப்பாடும் வன்னியர் குல சத்திரியர்கள்

              

             நாகர் வழிப்பாடும் வன்னியர் குல சத்திரியர்களும்


     வட தமிழகம் முழுவதும்  அதிகம் வாழும் ஒர் பூர்வக்குடியான வன்னியர் குல சத்ரியர்கள்  ஆண்டுதோறும் தை பொங்கல் திருவிழாவின் போது நாகர் வழிபாடு செய்கின்றனர் இதற்கு  பெயர் அம்சேரி . நாகம் குடியிருக்கும் அல்லது குடியிருந்த புற்றுக்கு பூசை செய்வார்கள் . அந்த பூசைகளை வன்னியர் குல சத்திரியர்களே நடத்துவர் ஆண்டாண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக இதை நடத்துவர் ஆனால் இதை தன் பங்காளிகள் மட்டும் சேர்ந்து விழா எடுப்பர் மாப்பிள்ளை வீட்டாரும் கலந்து கொள்வார்கள் ஆடு பலி கொடுக்கப்பட்டு அங்கே அதை   சமைத்து அனைவருக்கும் வழங்குவர்கள் . குல தெய்வ வழிப்பாடு போல் நடைப்பெறும் .  புற்றை குல தெய்வமாக வணங்குபவர்களும் உணடு பலர் தன் குல தெய்வத்திற்கு  நிகராகவும் வணங்குவார்கள் இதை இவர்கள் பல் நெடுங்காலமாக பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றனர் . பல ஆயிர ஆண்டுகளுக்கு முண்பு இந்தியா முழுவதும் இருந்து ஆட்சி செய்தவர்கள் நாகர்கள் என்று அழைப்பார்கள் மாகபாரதம் கூட பாண்டவர்களில் விசயனின் மனைவிகளில் ஒருவர் நாகர் குல இளவரசி என்று கூறுகிறது . அந்த மாகபாரத கதையை தன் குல கதையாக கொண்டவர்கள் பள்ளி எனும் வன்னியர் குல சத்திரியர்களே இது நாடும் ஏடும் அறிந்த செய்தி அந்த நாகர்களே வேளிர் என்றும் அழைப்பர் வன்னியர் குல சத்திரியர்கள் நாகபாம்பை தவிற மற்ற கொடிய விஷம் உள்ள பாம்புகளை அழித்துவிடுவார்கள் ஆனால் ஒரே ஒரு நாகத்தை கூட கொல்லமாட்டார்கள் புனிதமாக கருதுவார்கள் ஒருவன் ஒரு நாகத்தை அழித்தால் கூட தன் ஏழு தலைமுறையும் அழிந்துவிடும் என்று நம்புகின்றனர் .இவர்கள் அதற்கு ஒரு கதையும் கூறுகிண்றனர் தன் முன்னோர்களில் ஒர்  அரசன்   கோட்டையில் இருந்த மூன்று நாகத்தை அழித்துவிட்டாராம் பின்பு சில நாள்களில் அந்த அரசன் இறந்துவிட்டாராம்
அவன் நாட்டை வேறு ஒருவன் கைபற்றி கொண்டான்   .அடுத்த தலைமுறையில் இளவரசனுக்கும்   பல துண்பங்கள் நேர்ந்த்து ஒரு நாள் இளவரசன் முன் அதே மூன்று பாம்பு தெய்வமாக  வந்து அவனிடம் சில வழிகளை கூறியதாம் அந்த வழிகளை வைத்து தன் தந்தை நாட்டை  இளவரசன் மீட்டு கொண்டானாம் . அப்போது அந்த அரசன் ஒரு சத்தியம் செய்துகொடுத்தானாம் அந்த பாம்பிற்கு ஒவ்வொரு வருடமும் பொங்களுக்கு முந்திய நாள் என் வழிவந்த மக்கள் அனைவரும் உமக்கு நன்றி செழுத்துவார்கள் என்று அதனால் இன்று நாங்கள் வழிபடுகிறோம் என்கின்றனர் நம் சொந்தகள்.இது பொன்று பல கதைகள் உள்ளது இன்றும் தருமபரி பகுதியில் நம் மக்கள் இந்த நாக வழிப்பாட்டை செய்கின்றனர் . இப்பகுதியில் உள்ள   ஆலையங்களில் பாம்பு உருவம் பொறிக்கப்பட்ட கற்கள் மிக அதிகமாக கானபடுகிறது தனியாக இது பெரும்பாலும் அரச மரம் அல்லது வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் வேப்ப மரம் இவர்கள் குல மரமாக வணங்குகின்றனர் இந்த கோவிலுக்கென்று தனியாக நாகர் மானிய நிலங்கள் உள்ளது இது பல்லவர் ஆட்சியில் வழங்கப்பட்டது