புதன், 3 செப்டம்பர், 2014

அம்மன் வழிபாடும் வன்னியர் குல சத்திரியர்களும்



              அம்மன் வழிபாடும் வன்னியர் குல சத்திரியர்களும்
                  காளி /துர்கை / அம்மன் வழிப்பாடு
               வட தமிழகத்தில் தருமபுரி பகுதியில் மிக அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வன்னியர் குல சத்திரியரும்  தலைமையேற்று அம்மன் வழிபாடு செய்கின்றனர். பூஜை செய்வது எல்லாம் வன்னியர் குல சத்திரியர் மட்டுமே
பொது வழிப்பாடு
             ஊர் அம்மன் , மட்டும் பொதுவாக எல்லா வன்னியர் குல சத்திரியர் ஊர்களில் வழிப்படுவர் . அதனுடன் அந்தந்த வட்டார வழக்குடன் மற்ற அம்மனை வழிப்படுவர் . அதாவது செல்லியம்மன் , கொல்லி மாரியம்மன் உள்ளிட்ட அம்மனையும் வழிப்படுவர் .
              மகாகாளி  வழிப்பாடு தனியாக ஓர் நாள் நடத்தப்படும் வன்னியர் குல சத்திரியர் அனைவரும் இதை வழிப்படுவர்,   சில ஊர்களில் சில மாற்றம் இருக்கும் .
                 புலி , சிங்கம் , பசு , கருடம் , வில்  இதற்கு உருவம் செய்து இவை தன் குல தெய்வமாக தன் குல சின்னமாக வைத்து வழிப்பாடு செய்வார்கள்.  காலைப்பொழுதில் நெருப்பு தீயிட்டு குண்டம் செய்து அதில் புலி , சிங்கம் , பசு , கருடம் , வில் உருவம் : இவற்றுடன் அம்மன் கரகம் எடுத்துக் கொண்டு அருளாடி படி நடந்து வருவார்கள் அவ்வாறு குண்டதை கடந்தவுடன் ஊர் மக்கள் எல்லாம் பூமியில் படுத்துகொள்வார்கள் அவர்கள் மீது சிலைகளை தூக்கி கொண்டு நடந்து செல்வார்கள் , அவ்வாறு படுத்திருந்தால் தான் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை .
சாமி அருளாடி வந்தால் மட்டுமே குண்டத்தில் இறக்குவார்கள் அன்று அருள் வரவில்லை என்றால் அடுத்த நாள் வந்து சாமி அழைத்து குண்டத்தில் இறக்குவார்கள்
         வேப்பமரம் ,  வன்னி மரம்( கூவிளமரம்) , அரசமரம் .  இவற்றிற்கும் பூசை நடக்கும்
பூசை முறைகள்
             பொதுவாக அம்மன் வழிப்பாடு என்றாலே நான்கு அம்மன் மற்றும் முனியப்பன் , புலி , சிங்கம் ,   கருடம் , வில் உருவச்சிலை  மேலும் கரகம் இவற்றுக்கு ஆடு மற்றும் கோழி பலியிடுவர் . பசு  சிலைக்கு  உயிர் பலி கிடையாது . இது ஊர் பொதுவாக நடைப்பெறும்  .  மற்றப்படி அவர் அவர் வேண்டுதல்படி கோழி  , ஆடு பலியிடுவார்கள் ,
         அடுத்து நாள் விளக்கு தட்டு மற்றும் காய் பழம் படைப்பர்..
செவ்வாய்க்கிழமை  அன்று கூழ் ஊற்றுவார்கள்  . இதை அனைத்து சமுக மக்களும் வந்து வாங்கி செல்வார்கள்
 ஊரே  அழகாக இருக்கும் வான வேடிக்கைகள் நடத்தப்படும் . இரவு நேரத்தில் சிலம்பாட்டம் ,  உறியடித்தல் , வழுக்கமரம் ஏறுதல் மற்ற  கிராம கலைகள் , மாடு அடக்கல் , ஆடல் பாடல் ,மேலும் வன்னியன் பிறப்பு நாடகம் , பாரதம் , உள்ளிட்ட நாடகம் நடிக்கப்படும்,மாட்டு பரிசை நடக்கும் முன்பெல்லாம் குதிரை பரிசை நடக்கும் இப்ப இது அதிகம் கிடையாது.
அம்மக்களே கரகம்  எடுத்து ஆடுவார்கள்  புலி , சிங்கம் , பசு , கருடம் , வில் மற்றும் கரகம் இவற்றை அனைத்து வன்னியர் குல சத்திரியர் வீட்டிற்கும்  கொண்டு வரப்பட்டு    பூசை  நடத்தி மகிழ்வார்கள்  பறை முழங்க பம்பை சத்தம் செவியை பிளக்கும் . இந்த வழிப்பாட்டை ஊர் கவுண்டர் , நாட்டுகவுண்டர் ,  மந்திரிகவுண்டர் , கோல்கார கவுண்டர் ,  பொன்ற வன்னியர் குல சத்திரியர் மட்டுமே முன் நின்று நடத்துவர் 
இவ்வாறு அம்மன் வழிப்பாடு அதிகமாக தருமபுரிபகுதியில் வழிப்படுவார்கள் மிக பெரிய அளவில் விழா நடக்கும்  இடங்கள் காட்னாம் பட்டி, இண்டூர் , சோம்பள்ளி , மாறண்டள்ளி பட்டாளம்மன் ,  புதூர் மாரியம்மன் , அதியமான் கோட்டை . போன்றவை மிக பிரமாண்டமாக நடக்கும்  மற்றபடி எல்லா ஊர்களிலும் அம்மன் வழிப்பாடு நடத்தூவார்கள்  அதுவும் குறையில்லாமல் சிறப்பாக இருக்கும்
    நம் அரச வம்சத்தின் சிறப்புகளை நம் சத்திரிய வம்சத்தின்சிறப்பை  நம் ராஜபுத்திர வம்சத்தின் சிறப்புகளை நம்  வரலாறுகளை நாம் தான் வெளிபடுத்தவேண்டும்    .