சனி, 27 செப்டம்பர், 2014

பெரியாண்டச்சியம்மன் வாழிபாடு



   குல தெய்வம்  பெரியாண்டச்சியம்மன் வாழிபாடும் 
                    வன்னியர் குல சத்ரியர்களும்



  
                     பெரியாண்டச்சி சிலை படுத்த மாதிரி இருக்கும் சிலையின் கிழ் அரக்கனை வேல் கொண்டு குத்துவதாய் காட்சிதரும் . பெரியாண்டச்சி சிலையைச் சுற்றி 108 சாமிகள்தனித் தனியாக இருக்கிறது . அதில் சில பேர் மாதேஸ்வரன் , மாரியம்மா , பத்திரக்காளி , களியம்மன் . இந்த மாதிரி 108 சாமிகள் உள்ளது . இதை நடத்தி வைக்கும் பெரியவர்கள் மொத்தம்  1300 கோம்பு      குடும்பத் தலைவர்கள்   கலந்து  ஆராய்ந்து   நடத்துவார்கள் . இதில் வன்னியர் குல சத்ரியர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் மற்ற எவருக்கும் இங்கு அனுமதி கிடையாது . பூசை செய்வது வன்னியர் குல சத்ரியர்கள் மட்டும்தான் .
                     அசைவம் உண்ணும் சாமி   மாரியம்மா , பத்திரக்காளி , களியம்மன் மினியப்பன் (முனியப்பன்) ஒங்காளியம்மன்  என இதற்கு   பூசை நடத்தி படையல் இடுவர் . ஆம் அசைவம் உண்ணாத சாமிக்கு முதலில் பொங்கல் மற்றும் பழம் போன்று படையல் இட்டு பூசைகள் நடத்துவார்கள் .  மூன்றுப் பிரிவாக இருக்கிறதாம் முதலில் பெரியாண்டிச்சி , வினாயகர் , கருப்பசாமி , ஜயனாரப்பன் எனும் வேறு வேறு  இடத்தில் உள்ளது .  முதலில் விநாயகர்  கோவிலுக்கு பூசை நடக்கும் . பிரிந்து  சென்று வேறு ஊரில்  உள்ளவர்கள் அனைவரும் இங்கு வருவர் . 
                  விநாயகர் கோவிலூக்கு முதல் நாளே வரவேண்டும்   அந்தவிழாவிற்கு தெவம் என்று பெயர்  விநாயகர்  காப்பரை செய்வார்கள்  பச்ச பந்தல் செய்து புங்க மரத்தை கட்டி மறைத்து விடுவார்கள் கப்பரானை கோதுமை கலி செய்து தலை மற்றும் உடல் செய்வார்கள் . ஐந்து முகம் 11 கண்கள் இதில் இருக்கும் . முதலில் இருக்கும் இரண்டு முகம் இரண்டு முட்டை நடுவில் இருப்பதை விட்டுவிட்டு கடைசியில்  இருக்கும் கண்களுக்கு முட்டை நடுவில் பெயிண்ட் கலர் பூசி விடுவர் நடுவில் இருக்கும் உருவத்திற்கு கண்கள் மூன்று இதனால் இதை முக்கண் ஈஸ்வர் என்று பெயர் . ஒரு கண் நெற்றிலும் மற்றபடி இருகண்கள் இருக்கும்   ஆக மொத்தம் 11 கண்கள் மூக்கு , வாய் , பல் , கால் கை  போன்றவைக்கு கலர் பூசுவார்கள் பல் சிங்கப்பல்  இது கலியில் தான் செய்வார்கள் . இதை உருவத்தை பங்காளிகள் மட்டும் தான் செய்வார்கள்   . இந்த கப்பரையை ஜோடிச்ச பிறகு  அதை அந்த பாங்காளிகல் மட்டும் தான் தூக்க வேண்டும் . கோவில் பூசாரி தூக்கும் வழக்கமும் உண்டு . இந்த கப்பரைக்  கண் திறக்கும் போது எதிரில் யாரும் இருக்க கூடாது . இருந்தால் அவர் இறந்துவிடுவார் , கண் திறக்க ஒரு மச்சம் இல்லா கருப்பு ஆடு பலி கொடுப்பார்கள் . அந்த கப்பரையைக் கோவில் பூசாரி உள்ளிட்டோர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அறல் (மாலையம்மோடு) கோவிலுக்கு தூக்கி செல்வார்கள் . அங்கு செல்லூம் போது போர் வாள் கத்தி  அருவா கேடையம் வில் போன்றவையும் தூக்கி செல்கிறார்கள் . அவர்களுடன் மக்களும் செல்வார் இது எல்லாம் இரவில் தான் நடக்கும் . எப்படியும் பெரியாண்டிச்சி கோவிலூக்கு இரவு 2 மணிக்கு எல்லோரும்  சென்று விடுவார்கள் . 10,000 வீடுகளுக்கு மேல்   மக்கள் இருப்பார்கள் .
                    கோவிலுக்கு வந்த பின்   பெரியாண்டிச்சி   தலைமாட்டுள தெற்கே    கப்பர முகம் வடக்கில் தெரியும் படி  வைக்க வேண்டும்  . காலை 5 மணிக்கு வந்து பொங்கல் எல்லோரும்  வைக்கிறார்கள்  பூசை நடக்கும் போது ஆடு மட்டும் பலியிடுவார்கள்  . பின் பங்காளிகள் எல்லாம் சற்று தொலைவில் நிற்க்க பூசாரிகள் நன்றாக இரத்தம் , பொங்கசோறூ  கலந்து கையில் உண்டைபிடித்து  மற்றொருவர் தண்ணிர் தெளிக்க இந்த உண்டை சோற்றை வீசுவார்கள் . இந்த திருவிழா  வெள்ளிக்கிழமை நடக்கும்   அடுத்த வெள்ளிக்கிழமை மறுபூசை நடக்கும் . வீட்டிற்கு ஒருவர் சென்று வெள்ளிக்கிழமை பொங்கள் வைக்கிறார்கள் . கோவிலிலே பானைகள் பொங்கல் வைக்க தருகிறார்கள் . எல்லோருடைய பானையில் இருந்து ஒவ்வொரு கரண்டி எடுத்து சென்று . முதலில் பெரியாண்டிச்சிக்கும் பின் அரக்கனுக்கும் படைபார்கள்  அதற்கு அப்புறம் பூசைகள் நடக்கும் . இது மிகவும் சக்தி வாய்ந்த்து எங்கள் குல தெய்வம் என்கின்றனர் இம் மக்கள் .
                   முன்பு 15 நாட்கள் விடாமல் பூசை நடக்கும் அந்த நாட்களில் மஞ்சள் நிறம் வேட்டி தூண்டு கட்டவேண்டும் . செருப்பு போடக்கூடாது  . யாரும் மற்றவர்  வீட்டில் தண்ணீர்  கூட குடிக்க கூடாது .
                  இந்த கோவிலை  அரசாங்கம் எடுத்துக்கொள்ள அபகரிக்க நினைத்தது ஆனால் அது நடக்க விடவில்லை இம் மக்கள் இந்த கோவில் பற்றியும் இடம் பற்றியும் வெளிபடுத்த கூடாது என்று கூறியுள்ளனர்   

        பெரியாண்டிச்சி (தூர்கை,சிவன் )  , பெரியாண்டவர்  (சிவன்,பூதம் ) , வேடியப்பன் ( நடுகல்) , சாக்கியம்மன் , மழவராயன் , இந்த ஐந்தும்  அடங்கிய வழிபாட்டையும் வன்னியர் குல சத்ரியர்கள் ஒன்றாக  ஒரே விழாவாக செய்கின்றனர் . அதைபற்றி மிகவிரிவாக பிறகு பார்ப்போம் .